கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
நிலக்கோட்டை: கொடைக்கானல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்து, கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளரின் பங்களாவில் தங்கி படித்த 3 மாணவிகள் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்க பள்ளித் தாளாளர் பிரைட் பாலியல் தொந்தரவு தந்ததால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் பிரைட்டின் பங்களாவில் தங்கி படித்த 17 மாணவிகளில் 5 மாணவிகளும், சமையல்காரப் பெண்ணும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்ட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட் அனுராதாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
இதற்கிடையே தாளாளர் பிரைட் நேற்று மாலை கொடைக்கானல் நீதிமன்றத்தில் கைவிலங்கிட்டபடி அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது பிரைட்டிடம் மேலும் தகவல் பெற வசதியாக மேலும் சில தினங்கள் போலீஸ் காவலில் வைத்திருக்க போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தந்து நீதிபதி உத்தரவிட்டார்.