சொத்து வழக்கு-ஜெ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பான வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலத்தின் நகலை தங்களுக்கு வழங்குமாறு ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் அடிப்படையில் சாட்சிகள் வாக்குமூலத்தின் நகல் ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது. ஆனால், அதில் தவறுகள் இருப்பதாகவும், இதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ஜெயலலிதாவின மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் அந்த ஆவணத்தில் உள்ள தவறுகளை மட்டும் சரிசெய்ய மொழி பெயர்ப்பு நிபுணர்களை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் தனி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து ஜெயலலிதா மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும் அதுவரை தனி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளின் மறு விசாரணையையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வாய்தா-ஜெ.வுக்கு எதிரான போஸ்டர்: போலீசில் புகார்
இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் ஜெயலலிதாவைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர் மதுரை மாவட்ட திமுகவினர், கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போஸ்டர்கள் ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதத்தில் உள்ளது என்று கூறி அதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் ஆர்.டி.உதயகுமார், அதிமுக மதுரை மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜ் ஆகியோர் இன்று மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications