விரைவில் தொடங்கும் என்ஜினீயரிங் துணை கவுன்சிலிங்: 14, 16 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பொறியியல் படிப்புக்கான துணை கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. அகடமிக் பொது கவுன்சிலிங் கடந்த ஜுலை மாதம் 5-ம் தேதி தொடங்கி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
துணைவேந்தர் பேராரிசிரியர் பி. மன்னர் ஜவகர் நேற்று நடந்த கவுன்சிலிங்கை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 35 நாட்களாக கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது. இதற்கு 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களில் 45 ஆயிரம் பேர் வரவில்லை. 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
8-ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தாலும் தொடர்ந்து 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு கட் ஆப் மார்க் 92க்கும் குறைவாக எடுத்துள்ளவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 78 கட் ஆப் மார்க் வரை அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது காலியாக உள்ள 10,000 இடங்களுக்கு 13,000 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
துணை கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 14 மற்றும் 16-ம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும். விண்ணப்பங்களை வாங்கி அங்கேயே நிரப்பிக் கொடுக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ. 500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும்.
விண்ணப்பிக்க வரும் போது பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 ஹால் டிக்கெட், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (தேவைப்படுபவர்களுக்கு), பூர்வீகச் சான்றிதழ்(தேவைப்படுபவர்களுக்கு), முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சான்றிதழ் (தேவைப்படுபவர்களுக்கு) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொண்டு வர வேண்டும். இத்துடன் புகைப்படம் ஒன்றும் கொண்டு வர வேண்டும்.
வரும் 13-ம் தேதி கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்கள் தான் துணை கவுன்சிலிங்கில் இடம் பெறும். ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்வில் பெயிலாகி மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கல்லூரிகளில் இடங்களை தேர்ந்தெடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள இடத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
இந்த துணை கவுன்சிலிங்கின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். அப்போது மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரராஜ் அருகில் இருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications