3 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச்செயலாளர் க.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
1.தருமபுரி மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணி புரிந்து வரும் ப.சரவணன்,
2.சென்னை புறநகர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் உதவி ஆணையாளராகப் பணி புரிந்து வரும் ஆர்.கஜேந்திரகுமார்,
3.தருமபுரி மதுவிலக்கு அமல் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் சி.சீனிவாசன் ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றியமைக்காக, 2010 -ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
மேற்சொன்ன விருது, முதலமைச்சர் கருணாநிதியால் 2011ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன் பரிசுத்தொகையாக தலா 20,000 ம் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.