சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு: வியாபாரிகள் கலக்கம்
சுரண்டை: சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசியை அடுத்த சுரண்டையில் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். சுரண்டை பகுதியில் காய்கறி மார்கெட், பாத்திர வியாபாரம், ஜவுளி கடைகள் மற்றும் பல்வேறு வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
இங்கு தென்காசிக்கு அடித்தபடியான வியாபாரம் நடக்கும். கடந்த வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தையொட்டி வியாபார நிறுவனங்களில் பல லட்சம் முதல் கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பாத்திரக் கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
மேலும் காய்கறி மார்க்கெட்டுகளிலும் பொருட்களின் வரத்து அதிகரித்து வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் மார்கெட், பஜார் பகுதி மற்றும் டாஸ்மாக் கடைகளில் 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிகளவு புழக்கத்தில் விட்டுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிலர் கள்ள நோட்டு என தெரிந்ததும் அதை கிழித்தோ, எரித்தோ விடுகின்றனர். இதனை சாதகமாக்கிய அந்த கும்பல் கள்ள நோட்டுகளை சர்வ சாதாரணமாக புழக்கத்தில் விட்டுள்ளன. எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் உள்ளதால் வியாபாரிகளும் அதனை வாங்கி விடுகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் தங்கி கேரளாவைச் சேர்ந்த சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வி்ட்டு வந்தனர். அவர்கள் தான் தற்போது சுரண்டையை குறிவைத்துள்ளனரோ என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications