சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு: வியாபாரிகள் கலக்கம்
சுரண்டை: சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசியை அடுத்த சுரண்டையில் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். சுரண்டை பகுதியில் காய்கறி மார்கெட், பாத்திர வியாபாரம், ஜவுளி கடைகள் மற்றும் பல்வேறு வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
இங்கு தென்காசிக்கு அடித்தபடியான வியாபாரம் நடக்கும். கடந்த வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தையொட்டி வியாபார நிறுவனங்களில் பல லட்சம் முதல் கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பாத்திரக் கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
மேலும் காய்கறி மார்க்கெட்டுகளிலும் பொருட்களின் வரத்து அதிகரித்து வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் மார்கெட், பஜார் பகுதி மற்றும் டாஸ்மாக் கடைகளில் 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிகளவு புழக்கத்தில் விட்டுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிலர் கள்ள நோட்டு என தெரிந்ததும் அதை கிழித்தோ, எரித்தோ விடுகின்றனர். இதனை சாதகமாக்கிய அந்த கும்பல் கள்ள நோட்டுகளை சர்வ சாதாரணமாக புழக்கத்தில் விட்டுள்ளன. எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் உள்ளதால் வியாபாரிகளும் அதனை வாங்கி விடுகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் தங்கி கேரளாவைச் சேர்ந்த சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வி்ட்டு வந்தனர். அவர்கள் தான் தற்போது சுரண்டையை குறிவைத்துள்ளனரோ என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications