ரூ. 200-க்கு சிமெண்ட் திட்டம்: அல்லாடும் கடையநல்லூர் பயனாளிகள்
கடையநல்லூர்: ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் 200 ரூபாய்க்கு சிமிண்ட் வழங்கும் திட்டம் கடையநல்லூர் பகுதியில் சரிவர செயல்படாததால் பயனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக கட்டுமானப் பணிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தலைமைச் செயலக கட்டிடம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அத்துடன் தனியார் நிறுவனங்களுக்கும் ஏராளமான கட்டிடங்களை கட்டப்பட்டு வருகிறது. இதனால் கட்டுமானப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சிமிண்ட் விலை அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வீடுகட்ட முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு ஏழை, நடுத்தர மக்கள் வீடுகட்ட சலுகை விலையில் 200 ரூபாய்க்கு சிமிண்ட் வழங்கியது. ஆயிரம் சதுர அடி வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் 200 ரூபாய்க்கு சிமிண்ட் மூடை வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மாதம் 4370 டன்கள் சிமிண்ட் அரசிடம் இருந்து பெறப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் பயனாளிகளுக்கு 200 ரூபாயில் சிமிண்ட் மூடை வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் ஆயிரம் சதுர அடிக்குள் வீடுகட்டும் ஏழை, நடுத்தர மக்கள் தென்காசி சிவில் சப்ளை அலுவலகத்தில் சிமிண்ட் பெறுவதில் சிரமப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சிமிண்ட் வழங்க தாமதப்படுத்தி வருவதால் குறிப்பிட்ட நாளில் வீடுகட்டி முடிக்க முடியாமல் திணறுவதாக பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
முக்கியஸ்தர்களுக்கும் கூடுதலாக 20 அல்லது 30 ரூபாய் டிப்ஸ் கொடுப்பவர்களுக்கும் மட்டுமே சிமிண்ட் வழங்குவதில் சம்பந்தப்பட்ட துறையினர் முன்னுரிமை கொடுப்பதாக கடையநல்லூர் பகுதியில் உள்ள பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, வீடு கட்டி வரும் ஏழை, நடுந்தர மக்கள் நலன் கருதி குறிப்பிட்ட காலத்தில் 200 ரூபாய்க்கு சிமிண்ட் வழங்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications