தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்-ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி விஜயகாந்த்தின் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. 26 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றுகிறது.
இதுகுறித்து விஜயகாந்த கருத்து தெரிவிக்கையில், திமுக அரசின் ஊழல் ஆட்சி, விலைவாசி ஏற்றம், திமுக அரசின் மின்சார வெட்டு, திமுக அரசின் அராஜக ஆட்சி, குடும்ப ஆட்சி இதெல்லாம் சேர்ந்துதான் இன்று திமுக ஆட்சியை மக்கள் மாற்றக் காரணம்.
நிச்சயமாக நல்லாட்சி தருவோம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்துள்ளனர். அது நிச்சயம் நடக்கும், மக்கள் நம்பி்க்கை வீண் போகாது.
பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற திமுகவினரின் கற்பனை உடைத்தெறியப்பட்டுள்ளது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவே ஜெயலலிதாவுடன் கைகோர்த்தோம். நாங்கள் விரும்பியிருந்தவாறு தனியாகவே போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அது திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்துவிடும். அதனால் அதைத் தவிர்த்துவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டோம் . அதிமுக ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். அந்தத் திட்டம் எங்களிடம் இல்லை.
அதிமுக ஆட்சியில் முதல் வேலையாக கேபிள் டிவியை அரசுடமையாக்கினால் சந்தோஷப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.
மக்களுக்கும் சரி, திரையுலகினருக்கும் சரி இனி சுதந்திரம்தான். இனி அவர்கள் யாருடைய அடிமையும் இல்லை. சுதந்திரமாக செயல்படலாம். தன்னிச்சையாக செயல்படலாம்.
எனக்கும், எனது கட்சிக்கும் வாக்களித்த அத்தனை மக்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரிஷிவந்தியத்தில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், எனது கட்சித் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications