சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம், துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்-கருணாநிதி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினையொட்டிய நிகழ்ச்சிகள் பரமக்குடியில் நேற்று நடை பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலை மறியல், கலவரம் இவற்றின் காரணமாக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழந்திருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் பரமக்குடி வந்தால் வன்முறை நிகழலாம் என்று கருதி, அவருடைய வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவே, கலவர நிகழ்வுகள் பரமக்குடியிலும் மதுரையிலும் நடைபெற்றிருக்கின்றன.
ஜான்பாண்டியனை பரமக்குடிக்கு வர அனுமதித்திருந்தால் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும், அவர் வருவதைத் தடை செய்து, கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால், கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
நடைபெற்று விட்ட நிகழ்ச்சிகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு ஆட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு என்னுடைய அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
வள்ளுவர் குறள் கேட்டு வழக்கம் போல வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்!:
இந் நிலையில் வழக்கம் போல சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்ததை கேட்டு விட்டு திமுக எம்.எல்.ஏக்கள் இன்று நான்காவது நாளாக வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் நூதன முறையில் வெளிநடப்பு செய்து வருகின்றனர். அதாவது சட்டசபைக்கு அவர்கள் தினமும் வருகிறார்கள். சபாநாயகர் திருக்குறள் வாசித்து பொருள் கூறி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குறள் வாசித்து முடிந்ததும் அமைதியாக வெளியேறி விடுகின்றனர். இப்படியே 3 நாட்களாக இவர்கள் செய்துவருகிறார்கள். இன்று நான்காவது நாளாகவும் இதேபோல வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் தங்களுக்கு பேச சபாநாயகர் அனுமதி தருவதில்லை. தங்களைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அனுமதி தருவதில்லை. எங்களது குரலை ஒலிக்க விடாமல் செய்கிறார்கள். எனவே தான் காதுக்கு இனிய திருக்குறளை கேட்டு விட்டு வெளியேறுகிறோம் என்று இந்த நூதன வெளிநடப்புக்கு திமுகவினர் காரணம் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications