கொல்கத்தா மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் சாவு: விசாரணைக்கு மமதா உத்தரவு
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் குழந்தைகள் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் இறந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது பி.சி.ராய் குழந்தைகள் நல மருத்துவமனை. அங்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 12 குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டதால் தான் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துமவமனை உயர் அதிகாரி திலிப் ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
நாங்கள் எங்கள் சேவை மற்றும் சிகிச்சையை மேம்படுத்தத் தான் செய்கிறோம். இருப்பினும் சில குழந்தைகள் இறந்துவிடுகின்றன. குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் கொண்டு வரப்படுவதால் தான் அவற்றை காப்பாற்ற முடிவதில்லை என்றார்.
ஆனால் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தும் உடனே அனுமதிக்காமல் அதிகாரிகள் கால தாமதம் செய்ததால் தான் குழந்தைகள் இறந்தன என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் இறந்த 6 மாத குழந்தை அபிரின் உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் தான் இதே மருத்துவமனையில் 18 குழந்தைகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications