மசோதாவை மட்டும் நிறைவேற்றாவிட்டால் 5 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம்: அன்னா அதிரடி
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்னா ஹசாரே கடந்த மாதம் 16ம் தேதி முதல் மவுன விரதம் இருந்து வந்தார். 19 நாட்களாக மவுன விரதம் இருந்து வந்த அவர் இன்று காலை 7 மணியளவில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் தனது மவுன விரதத்தை முடித்துக் கொண்டார். மவுன விரதத்தை முடித்தவுடன் அவர் சொன்ன முதல் வார்த்தை பாரத் மாதா கி ஜெய்.
லோக்பால் மசோதா குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்னா நேற்றிரவு டெல்லி வந்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் யாருக்காகவும், எந்த கட்சிக்காகவும் மவுன விரதம் இருக்கவில்லை. எனக்காத் தான் இருந்தேன். ராம் லீலா மைதானத்தில் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததில் எனது உடல் நிலை பாதிக்கப்பட்டது. தற்போது மவுன விரதம் இருந்ததால் எனது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய எடை மற்றும் ரத்தஅழுத்தம் தற்போது நார்மலாக உள்ளது. லோக்பால் மசோதாவுக்காகவும், ஊழலை எதிர்த்தும் நாம் போராட வேண்டும்.
போராடத் தேவையான புது தெம்பு கிடைத்திருக்கிறது. நான் போராடத் தயார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம். மத்திய அரசு உத்தரகண்ட் லோக்ஆயுக்தாவை முன் உதாரணமாகக் கொண்டு செயல்படட்டும்.
ஊழல் என்று வந்துவிட்டால் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடந்த இடைத்தேர்தலின்போது அன்னா குழு காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்தது. இதையடுத்து அங்கு காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications