ஃபீஸ் கட்டவிட்டாலும் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமண குமார் முதல் வகுப்பு படித்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் மூவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகங்கள் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. இதையடு்தது சிவகுமாரும், மோகனும் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எம். பாரி ஆஜரானார். மனுதாரர்கள் தங்கள் மனுவில், கல்விக் கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாநில அரசு அறிவித்தபடி அவர்களு்ககு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
வழக்கறிஞர் பாரி வாதாடுகையில்,
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி பெறும் உரிமை உள்ளது. இது அரசு உதவி பெறாத கல்விகளுக்கும் இது பொருந்தும்.
நலிவந்த வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்கி, எந்த கட்டணமும் இன்றி கல்வி அளிக்குமாறு அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மாநில அரசு உத்தரவிடவில்லை என்றார்.
இந்த வழக்கு வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 3 குழந்தைகளையும் வகுப்பறைகளுக்குள் சேர்க்குமாறும், அவர்களின் கல்விக் கட்டணைத்தை மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசிடம் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications