ஃபீஸ் கட்டவிட்டாலும் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமண குமார் முதல் வகுப்பு படித்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் மூவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகங்கள் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. இதையடு்தது சிவகுமாரும், மோகனும் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எம். பாரி ஆஜரானார். மனுதாரர்கள் தங்கள் மனுவில், கல்விக் கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாநில அரசு அறிவித்தபடி அவர்களு்ககு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
வழக்கறிஞர் பாரி வாதாடுகையில்,
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி பெறும் உரிமை உள்ளது. இது அரசு உதவி பெறாத கல்விகளுக்கும் இது பொருந்தும்.
நலிவந்த வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்கி, எந்த கட்டணமும் இன்றி கல்வி அளிக்குமாறு அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மாநில அரசு உத்தரவிடவில்லை என்றார்.
இந்த வழக்கு வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 3 குழந்தைகளையும் வகுப்பறைகளுக்குள் சேர்க்குமாறும், அவர்களின் கல்விக் கட்டணைத்தை மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசிடம் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications