லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க ஹசாரே கோரிக்கை
டெல்லி: வலுவான லோக்பால் மசோதவை தாக்கல் செய்ய ஏதுவாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்றும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
லோக்பால் மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை எனில், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம். லோக்பால் மசோதா மீது விவாதம் நடத்த காலம் போதவில்லை எனில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும். லோக்பால் மசோதா நாட்டுக்கு முக்கியமானது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்ட உதாரணங்கள் இதற்கு முன்பு நிறைய உள்ளன. அதுபோல் இப்போதும் செய்யலாம். ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவரும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்துள்ளனர். அவர்களை நாங்கள் நம்புகிறோம்
மீண்டும் போராட்டம்:
நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால், திட்டமிட்டப்படி 27ம் தேதி உண்ணாவிரதம் இருப்பேன். பருவ நிலை நன்றாக இருந்தால் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்வேன். அப்போதுள்ள பருவ நிலையை பொறுத்து உண்ணாவிரத இடம் முடிவு செய்யப்படும்.
இல்லையெனில் உண்ணாவிரதம் வேறு இடத்துக்கு மாற்றப்படும். சி.பி.ஐ. அமைப்புக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படவேண்டும் என்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து சத்தமே வரவில்லை. இதில் அவர்களது கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications