அணைக்கு மத்திய படை பாதுகாப்பு தேவையில்லை: தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததால் தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் குறித்து 15ம் தேதிக்குள், அதாவது இன்று பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு அளிக்கும் என்று உறுதியளித்திருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கோரும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதே போல இந்த விவகாரம் குறித்து இரு மாநிலங்களின் கூட்டத்தைக் கூட்ட பிரதமருக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் விரும்பாத நிலையில் அதை வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications