முல்லைப்பெரியாறு: கூடலூரில் போலீஸார் திடீர் தாக்குதல்-தடியடி கண்ணீர்புகை வீச்சு- பலர் காயம்

முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கம்பம், குமுளி, கூடலூர் பகுதியில் தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் வன்முறை
இந்த நிலையில் இன்று கூடலூரை அடுத்த லோயர் கேம்ப் பகுதியில் ஒரு லட்சம் பொதுமக்கள் வரை கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போக கூறி போலீசார் அறிவுறுத்தவே, அதனை கேட்காமல் குமுளியை நோக்கி மக்கள் முன்னேற முயன்றனர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் 200 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் மீது கல்வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கினர். உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதிக அளவில் தடியடியும் நடத்தினர். இன்று மட்டும் 5 முறை தடியடி நடத்தப்பட்டது. இதில் கூடலூர் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் வேன் ஒன்றும் சேதமடைந்தது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு போலீசரே தங்களின் மீது தடியடி நடத்தியதில் பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர். தாக்குதல் நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications