கடலூரில் 100% மின்சாரம் வழங்க சீரமைப்பு பணியில் 1,000 இபி ஊழியர்கள்: அமைச்சர் சம்பத்
கடலூர்: புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் நகரில் 100 சதவீதம் மின்சாரம் வழங்க 1,000 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
தானே புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கடலூர் இயல்பு நிலைக்குத் திரும்ப கடுமையாக போராடி வருகிறது. இன்னும் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை, குடிநீர் பிரச்சினையாக உள்ளது. பால் கிடைக்கவில்லை. சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கடலூரில் விரைவில் மின்சாரம் வழங்க சீரமைப்பு பணி ஒழுங்காக நடக்கிறதா என்று அமைச்சர் எம்.சி. சம்பத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு நத்தப்பட்டு துணை மின் நிலையத்திற்கு சென்றார்.
மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு மின்சாரம் வழங்கினால் ஏதாவது பிரச்சனை வருமா என்றெல்லாம் அவர் ஆய்வு செய்தார். அதன் பிறகு கேப்பர்மலை, செம்மங்குப்பம் ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலூரில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புயல் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நகரில் 100 சதவீத மின்சாரம் வழங்க 1,000 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதன்மை பொறியாளர் தலைமையில் மின்வாரிய அதிகாரிகளும் கடலூரில் தங்கி சீரமைப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர் என்றார்.
அப்போது அவருடன் வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி அபூர்வா, மின்சார வாரிய முதன்மை பொறியாளர், நகரபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் குமார் என்கிற குமரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications