எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிரான விசராணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி: கர்நாடக லோக்ஆயுக்தா போலீசார் தனக்கு எதிராக பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு எதிராக விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
1999-2004 காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தார். அப்போது அவர் சுரங்கம் தோன்றுவதற்காக வனத்துறை நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்துள்ளார் என்றும், தனது குடும்பத்தார், நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்றும் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆபிரகாம் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடு்தது எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக அம்மாநில லோக்ஆயுக்தா போலீசார் கடந்த டிசம்பர் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட அந்நீதிமன்றம் மறுத்தது.
இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நிலம் வழங்கப்பட்டது அமைச்சர்கள் குழுவின் முடிவே தவிர தனிப்பட்ட நபரின் முடிவாக நீதிமன்றம் கருதக்கூடாது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கபீர், சுரிந்தர் சிங் நிஜ்ஜார் மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணாவுக்கு எதிராக விசாரணை நடத்த தடைவிதித்து உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications