சென்னை, தமிழகத்தின் பெரும்பகுதியை மூடிய கடும் பனிமூட்டம்-மக்கள் அச்சம்!

தமிழகத்தில் தற்போது பனியின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இரவிலும், அதிகாலையிலும் மட்டுமே பனி சற்று அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரில் நிற்பவர் தெரியாத அளவுக்கு மிக அடர்த்தியாக பனிமூட்டம் இருந்தது. இந்தப் பனி மூட்டம் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஒரே சமயத்தில் காணப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுகையில், தரைக்காற்றின் வேகம் குறைந்து ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இந்த பனி மூட்டம் ஏற்பட்டுள்ளதாக விளக்கினர்.
சென்னையில் காலையில் காணப்பட்ட இந்த கடும் பனிமூட்டத்தால் மக்கள் பெரும் குழப்பமடைந்தனர். சாலைகளில் வாகனங்களில் சென்றோர் பெரும் தடுமாற்றத்துக்குள்ளானார்கள். அத்தனை பேரும் முகப்பு விளக்கை போட்டபடி பயணித்தனர். காலை 9 மணி வரையிலும் பனி மூட்டம் விலகவில்லை.
மேலும் வேகமாகவும் வாகனங்களால் செல்ல முடியவில்லை. ரயில் சேவையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ரயிலக்ள் அனைத்தும் வழக்கமான வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே சென்றன.
விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பனி விலகிய பின்னரே விமானங்களை இயக்குவோம் என்று அதிகாரிகள் கூறியதால் பயணிகள் விமான நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.
சென்னை மட்டுமல்லாமல், அருகாமை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி என பல மாவட்டங்களிலும் இன்று பனி மூட்டம் மக்களை வியப்படைய வைத்தது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications