குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் - ஒருமித்த கருத்தை காங். ஏற்படுத்த சி.பி.எம். வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாரம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி அல்லது ஹமீத் அன்சாரியை நிறுத்தினால் ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து நாளை நடைபெற உள்ள கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் ஆலோச்சிக்கப்படும் என்றும் சீத்தாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல்கலாமை நிறுத்தியபோது ஒருமித்த கருத்தை ஏற்படுத்தாததாலேயே லஷ்மி செகலை இடதுசாரிகள் நிறுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது என்பதையும் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications