ஒரு வழியாக சட்டசபைக்கு வந்தார் விஜயகாந்த்... கையெழுத்துப் போட்டு விட்டு போய் விட்டார்!!

கடந்த மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின்போது தேமுதிக உறுப்பினர்களுக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாதம் மூண்டது. அப்போது கோபத்துடன் படாரென்று எழுந்த விஜயகாந்த், அதிமுக உறுப்பினர்களைப் பார்த்து கண்களை உருட்டி, கைகளை நீட்டி, விரல்களை சுட்டி, நாக்கைக் கடித்து ஆவேசமாகப் பேசினார். இதையடுத்து அவரை 10 நாள் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஜெயக்குமார்.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் விஜயகாந்த். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை சபாநாயகருக்கு முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சஸ்பெண்ட் காலம் முடிந்தது. ஆனாலும் விஜயகாந்த் சபைக்கு வரவில்லை. இதையடுத்து இதை வைத்தே தேமுதிகவினரை வாரி வந்தனர் அதிமுக உறுப்பினர்கள். இதுதொடர்பாக பலமுறை அதிமுக உறுப்பினர்களுக்கும், தேமுதிக உறுப்பினர்களுக்கும் இடையே காரசார வாதம் நடந்து வந்தது.
முதல்வர் ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்து விட்டு நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடலைக் குறிப்பிட்டு விஜயகாந்த்தைக் கிண்டலடித்தார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென சட்டசபைக்கு வந்தார் விஜயகாந்த். வந்தவர் நேராக சட்டசபைக்குள் போவார், ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் லாபியோடு நின்று விட்டார். அங்கிருந்து உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மட்டும் போட்டு விட்டு விர்ரென கிளம்பிப் போய் விட்டார்.
வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர்கள் அவர்களுக்கென அரசு கொடுக்கும் காரில்தான் வருவது வழக்கம். ஆனால் கார் தொடர்பாக சட்டசபை செயலகத்திற்கும், விஜயகாந்த்துக்கும் இடையே ஈகோ மோதல் நடந்து வருவதால் தனது சொந்தக் காரிலேயே விஜயகாந்த் வந்தார், சென்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications