பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டரை தாக்கியவர்கள் மீது புதிய சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களால் கடந்த வாரத்தில் மட்டும் டாக்டர்கள் 2 முறை தாக்கப்பட்டனர். இதையடுத்து டாக்டர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் மாநிலம் தழுவிய அளவில் கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அமுதனைப் பார்க்க சிலர் கும்பலாக வந்தனர். அவர்களை கும்பலாக உள்ளே விட மறுத்த மருத்துவக் கல்லூரி மாணவரான ராஜேஷ் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாக்டரை தாக்கிய 6 பேர் மீது தமிழ்நாடு மருத்துவ சேவை நபர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவன சட்டம் என்ற புதிய சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே டாக்டர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடிவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால்
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு விஜய் வேண்டுகோள் விடுக்கவிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+