தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூர கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 2வது தெருவைச் சேர்ந்தவர் நெக்டர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
மேலும் தூத்துக்குடி தெற்கு காட்டான் ரோடு காரக்கோட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புது வீடு கட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டு பணிகளை மேற்பார்வையிட சென்றார். நேற்று காலை புது வீட்டில் வேலைக்காக தொழிலாளர்கள் வந்தனர். அப்போது அங்கு நெக்டர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் அருகே மரக்கட்டையும், கல்லும் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி டி.எஸ்.பி. ராஜேந்திரன், ரூரல் டி.எஸ்.பி. நாராயணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை தொழிலாளர்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சென்ற பின்னர் நெக்டர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்களுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நெக்டரை கட்டையால் தாக்கியுளளனர். இதி்ல் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் கருங்கல்லை போட்டு கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக நெக்டரிடம் வேலை பார்த்து வந்த சுடலை உள்ளிட்ட 5 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நெக்டர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications