டிரைவர் செல்போனில் பேசியதால்தான் விபத்து.. வாய் பேச முடியாதவர் நடித்து விளக்கம்!
சென்னை: சென்னையில் நேற்று அண்ணா மேம்பாலத்தில்நடந்த விபத்துக்கு செல்போனில் பேசியபடி பஸ்ஸை டிரைவர் ஓட்டிச் சென்றதே காரணம் என்று விபத்தில் சிக்கி காயமின்றி தப்பிய வாய் பேச முடியாத ஒரு வாலிபர் சைகை மூலம் நடித்துக் காட்டி விளக்கியுள்ளார்.
அவரது பெயர் பாலசுப்ரமணியம், வாய் பேச முடியாதவர். கால்கள் ஊனமுற்றவர். இவர் விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணித்துள்ளார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸாரிடம் அவர் சைகை மூலம் நடித்துக் காட்டி விளக்கினார்.
பாலசுப்ரமணியம் பாரிமுனையில் பஸ் ஏறியுள்ளார். அண்ணா மேம்பாலத்தின் மீது பிற்பகல் 2 மணியளவில் பஸ் வந்தது. அப்போது மேம்பாலத்தின் இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அந்த சமயத்தில் அவரது வலது கையில் செல்போன் இருந்துள்ளது. இடது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துள்ளார்.
அப்போது திடீரென பஸ் நிலைதடுமாறி சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்துள்ளது. அதிர்ஷ்டசமாக பாலசுப்ரமணியம் பஸ்சின் வலது புறம் இருந்ததால் காயமின்றி தப்பியுள்ளார்.
இவரது வாக்குமூலம் விசாரணைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications