செங்கல்பட்டு முகாமிலிருந்து 4 பேரை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற முடிவு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 4 பேர் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அகதிகள் தடுப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் 30 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது ஆயுதம் கடத்தல், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கி இருத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக சிறப்பு முகாமில் இருக்கும் இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதனை கண்டித்து 9 பேர் கடந்த 15​ ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் 9 பலரது உடல் நிலை மோசமடைந்தது. அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருததுவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்தோரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் முகாமில் உள்ள சிவக்குமார், லோகநாதன், கமலாசரண், தனுசன் ஆகிய 4 பேரை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற கியூ பிராஞ்ச் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த 4 பேரையும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+