ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி- 4 பேர் கைது- 'டுபாக்கூர்' மன்னன் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு

சென்னை கொளத்தூர் குடியிருப்பில் அப்ரோ டிரஸ்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று செயல்படுவதாகவும் சுய உதவிக் குழு பெண்களுக்கு வட்டியில்லாத கடன் தருவதாகவும் விளம்பரம் செய்தது.
இதை நம்பி பல சுய உதவிக் குழுக்கள் பணத்தைக் கொடுத்திருந்தனர். ஆனால் இப்படி ஒரு டுபாக்கூர் மோசடி நடப்பதை அறிந்து ரிசர்வ் வங்கி அதிர்ந்து போனது. இதனால் ரிசர்வ் வங்கி கண்டனமும் தெரிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் பெயரில் மோசடியில் ஈடுபடும் அப்ரோ நிறுவனத்திடம் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை அடுத்து உஷாரான சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தி மத்திய குற்றப் பிரிவு போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் ஏசுதாசை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து ஏசுதாசின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது தலைமறைவாக உள்ள டுபாக்கூர் மன்னன் ஏசுதாசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் ரொம்ப கொடுமை என்னவெனில் ரிசர்வ் வங்கியிடம் சிக்கி தலைமறைவான பிறகும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் அப்ரோ நிறுவனத்துக்கு ஆதரவாக முழக்கம் போட்டதுதான்!
-
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications