தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தலாம்-நெடுமாறன்
ஈரோடு: இலங்கை இனப் படுகொலை சம்பவத்திற்கு உலக தமிழர்களிடம், திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு அவர் டெசோ மாநாட்டை நடத்தலாம் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் காசியானந்தன், தமிழர் உரிமை முன்னணி ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் கா.பரந்தாமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பழ.நெடுமாறன், உலக தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து கூறியதாவது,
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இலங்கை அரசும், மத்திய அரசும், மத்திய அரசுக்கு உறுதுணையாக செயல்பட்ட திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். இதை மறைப்பதற்காக டெசோ மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகிறார்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். நெருக்கடியான அந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உதவாத கருணாநிதி இப்போது டெசோ மாநாடு நடத்துவது ஏன்?
இதற்காக உலக தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்த வேண்டும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து தமிழர் தலைவர்கள் வருவதாக கருணாநிதி தகவல் வெளியிட்டு வருகிறார்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது கருணாநிதி நாடகம் நடத்திய போது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. விரைவில் தமிழீழ நாடு உருவாகும் என்றார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications