For Daily Alerts
Just In
திருப்பதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: 1,000 விடுதி அறைகள் மூடல்
இதையடுத்து திருமலையில் நேற்று தங்கும் விடுதிகளில் 1,000 அறைகள் பூட்டப்பட்டுவிட்டன.
திருப்பதி கோவிலில் இத்தனை அறைகளை பூட்டி வைத்தது இதுதான் முதல்முறையாகும்.
ராம்பகீசா, சப்தகிரி, கல்யாணி ஆகிய தங்கும் விடுதிகளிலும், சேஷாத்ரி நகர், அஞ்சனாத்திரி நகர், சங்கு மிட்டா பகுதிகளில் உள்ள சத்திரங்களிலும் தண்ணீர் சப்ளை தடைபட்டதால் அறைகள் மூடப்பட்டன.
அதே போல வி.ஐ.பி. பக்தர்கள் தங்கும் சங்குமிட்டா கெஸ்ட் ஹவுஸ், அஷ்ட வினாயகா போன்ற விடுதிகளிலும் தண்ணீர் இல்லை. இந்த விடுதிகளுக்கு டேங்கர்கள் மூலம் தண்ணீர் சப்னை செய்யப்பட்டது.
ஆனால் எவ்வளவு தண்ணீர் கொண்டு வந்தாலும் போதவில்லை. இதையடுத்து அறைகள் ஒதுக்குவதை தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது.
English summary
After a decade, the Tirumala hills are facing severe scarcity of water this year. Pilgrims on Tirumala hills were not forced to wait in their cottages and guestrooms for many hours due to shortage of water
Story first published: Thursday, August 9, 2012, 12:09 [IST]