பண தகராறில் பள்ளி மாணவன் கடத்தல்-பாதிரியார் உட்பட 3 பேர் மீது புகார்
சென்னை: சென்னையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் பள்ளி மாணவனை கடத்தியதாக, பாதிரியார் உட்பட 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எப். ரயில்வே குடியிருப்பு 6வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(45). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் லிடியா(40). இவர்களின் மகன் ஜேக்கப் சுதிர்(14). அதே பகுதியில் உள்ள ஐ.சி.எப். ரயில்வே மெட்ரிக்லேஷன் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று காலையில் வழக்கம் போல ஜேக்கப் சுதிர் பள்ளிக்கு சென்றார். சுரேஷ் பாபு தொழில் தொடர்பாக வெளியே புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் மதியம் 2.30 மணி அளவில் சுரேஷ் பாபுவின் வீட்டிற்கு போன் செய்த மர்மநபர், லிடியாவை மிரட்டினார்.
போனில் பேசிய மர்மநபர், காலையில் பள்ளிக்கு சென்ற ஜேக்கப் சுதீரை காரில் கடத்தி சென்றதாகவும், அவனை திரும்ப உயிருடன் பார்க்க, சுரேஷ் பாபு தர வேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தால், ஜேக்கப் சுதிரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு பயந்து போன லிடியா, உடனடியாக இது குறித்து ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவன் ஜேக்கப் சுதீர் படிக்கும் பள்ளி அருகே உள்ள பகுதியில் போலீசார் விசாரித்தனர். இதில் ஜேக்கப் சுதீரை காலை 9 மணியளவில் நீல நிறத்திலான காரில் சிலர் ஏற்றி சென்றதாக தெரியவந்தது.
இந்த நிலையில் மீண்டும் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், ஜேக்கப் சுதீரை தற்போது ஆந்திராவில் அடைத்து வைத்திருப்பதாகவும், ரூ.10 லட்சம் பணம் தயாராகிவிட்டதா என்றும் கேட்டனர்.
போலீசாரிடம் லிடியா அளித்த புகாரில் பெரம்பூரை சேர்ந்த பாதிரியார் பிரகாஷ், ஆந்திராவை சேர்ந்த நாகேஷ்வரராவ் ரெட்டி, வினய் ஆகிய 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் ஜேக்கப் சுதீர் தற்போது ஆந்திராவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் பேரில் தனிப்படை போலீசார் காளகஸ்தி மற்றும் நெல்லூர் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications