வீட்டில் நகை திருடிய பெண்ணை மன்னித்து ஜாமீனுக்கும் உதவிய சாப்ட்வேர் என்ஜினியர்
பெங்களூர்: தமது வீட்டில் நகை திருடிய வேலைக்காரப் பெண்ணை மன்னித்து அவருக்கு ஜாமீன் கொடுத்து சிறையிலிருந்து மீட்டிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்.
பெங்களூரைச் சேர்ந்த 32 வயது பிரிஜேஸும் அவரது மனைவியும் அல்சூர் பகுதியைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை தமது வீட்டில் வேலைக்கு சேர்த்திருந்தனர். கோகிலா மீது கணவனும் மனைவியும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். கோகிலாவிடம் வீட்டின் ஒரு செட் சாவியையும் கொடுத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பிரிஜேஸின் வீட்டில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போய் வந்திருக்கிறது. மொத்தம் ரூ3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போய்விட்டன. இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. பிரிஜேஸின் வீட்டுக்கு வந்து போகும் ஒரே வெளியாள் கோகிலாதான் என்பதால் அவர் மீது போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோகிலாதான் நகைகளைத் திருடியது தெரியவந்தது. திருடிய நகைகளை அடகுக் கடையில் கொடுத்து பணமாக்கி அதை சிட் பண்டில் முதலீடு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கோகிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோகிலாவின் கணவர் ஒரு நெசவுத் தொழிலாளி. அவரது குழந்தைகள் அனைத்தும் 10 வயதுக்கு குறைவானவர்கள். தாயார் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், அந்தக் குழந்தைகள் படாதபாடு பட்டுள்ளனர்.
இது குறித்து அந்தக் குழந்தைகளுடன் வந்து கோகிலாவின் கணவர் கதறியளவே, பிரிஜேஸும் ஆத்திரப்படாமல் திருடிய நகைகள் கைக்கு வந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாகக் கூறியிருக்கிறார்.
பின்னர் போலீஸ் உதவியுடன் நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து போலீசாரிடம் கோகிலாவை விடுவிக்குமாறு பிரிஜேஸ் கேட்டுக் கொண்டதோடு, கோகிலாவின் ஜாமீனுக்கான தொகையையும் அவரே கட்டி வெளியே கொண்டு வந்திருக்கிறார்.
சாப்ட்வேர் என்ஜினியர்கள் என்றாலே "சாப்ட்'மனசு தானோ!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications