குப்பைகளை அகற்றாவிடில் பெங்களூர் மாநகராட்சியை கலைக்க உத்தரவிடுவோம்: கர்நாடகா ஹைகோர்ட்
பெங்களூர்: பெங்களூர் தெருக்களில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றாவிட்டால் பெங்களூர் மாநகராட்சியை கலைக்க உத்தரவிடுவோம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியைக் கலைக்கக் கோரி வழக்கறிஞர் ஜி.ஆர்.மோகன் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
பெங்களூரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் கடமையில் இருந்து பெங்களூர் மாநகராட்சி தவறியுள்ளது. குப்பைகள் குவிந்துள்ளதால் பொதுசுகாதாரம் சீர்கெட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைகளை அகற்ற தவறினால், மாநகராட்சி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடுவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையையும் மாநகராட்சி பொருள்படுத்தவில்லை என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று நடந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் ரஜ்னீஷ் கோயல் கூறுகையில்,
நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40 சதவீத குப்பைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற கோரப்பட்ட புதிய ஒப்பந்தப்புள்ளி மீது இறுதி முடிவு எடுத்து அது வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதி சென் பெங்களூர் மாநகராட்சியை கண்டித்தார். மேலும் குப்பைகளை அகற்றவில்லை என்றால் மாநகராட்சியைக் கலைக்க நீதிமன்றம் தயங்காது என்றார். இது தவிர குப்பைகளை அகற்ற மாநகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 5ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications