பேஸ்புக் கருத்துக்கு கைது: முறைப்படுத்த மத்திய அரசு முடிவு

சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானபோது மும்பையில் பந்த் நடத்தப்பட்டதை எதிர்த்து பேஸ்புக் இணையதளத்தில் கருத்து வெளியிட்டதற்காக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு தவறாக பயன்படுத்துவதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கபில் சிபல், "ஒரு சில மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசாரின் செயல்பாடு சரியல்ல என்பதே மத்திய அரசின் கருத்து. நாடுமுழுவதும் ஒட்டு மொத்தமாக அந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரியவில்லை.
குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு இந்த சட்டப்பிரிவு எதிரானது அல்ல. இந்த சட்டப்பிரிவை சரியாக பயன்படுத்துவது தொடர்பாக மாநில போலீசாருக்கு தெரிவிக்க சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு விரைவில் அனுப்பும்" என்றார்.
இந்த புதிய சுற்றறிக்கைப் படி இனி இப்பிரிவின் கீழ் யார் மீதாவது போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனில் டெபுடி கமிஷனர் அந்தஸ்திலுள்ள அதிகாரியின் ஒப்புதல் வாங்க வேண்டுமென தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications