படுகொலையான இந்திய வீரர்கள் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தின் ஹேம்ராஜ், சுதாகர் சிங் ஆகியோர் படுகோரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
ஹேம்ராஜ், உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தின் ஷேர்நகரைச் சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். இவரது உடல் நேற்று சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மற்றொரு ராணுவ வீரரான சுதாகர்சின் மத்திய பிரதேச மாநிலத்தின் தாதியா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 11 ஆண்டுகலாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். கடந்த அக்டோபர்மாதம்தான் கடைசியாக தமது வீட்டுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது உடலும் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று பின்னிரவில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications