திருப்பூர் வாலிபர் திருவண்ணாமலையில் கல்லால் அடித்துப் படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திருவண்ணாமலையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். ஏன் இந்தக் கொலை என்று தெரியவில்லை.
அத்தியாந்தல் என்ற இடத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது. தனியார் மருத்துவமனை அருகே அவரது உடல் கிடந்தது. நிர்வாண நிலையில் அவர் காணப்பட்டார். அவர் வைத்திருந்த பையில், பாபி வசந்தகுமார், திருப்பூர், கோபால் நகர் 2வது தெரு என்ற முகவரி இருந்தது.
திருவண்ணாமலை போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிவலம் வந்தபோது இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எதற்காக இந்தக் கொலை என்றுதெரியவில்லை. நிர்வாணப்படுத்தி உடலைப் போட்டிருப்பதைப் பார்க்கும்போது பெண் விவகாரம் காரணமாக நடந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது.












Click it and Unblock the Notifications