கோடையில் சென்னைக்கு குடிநீர் பஞ்சமா?: சட்டசபையில் விவாதம்!!

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ப குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. அனைவருக்கும் குடிநீர் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தாலும் இப்போது பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் அதை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கேபி முனுசாமி, சென்னை மக்களுக்கு மட்டுமல்ல, சென்னைக்கு வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு ஒருநாளைக்கு 831 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதம் வரை நீர் ஆதாரம் உள்ளது. நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவுபடுத்தி அந்த தண்ணீரையும் விரைவில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். எனவே சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்றார்.
பின்னர் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. மேஜர் சாமி, மேலூர் தொகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆட்சிலேயே கேட்டோம். ஒவ்வொரு மானிய கோரிக்கையின்போதும் இதுபற்றி பேசாத நாளே கிடையாது. கடந்த ஆட்சியில் இந்த வருடம் அடுத்த வருடம் என காலம் கடத்தினர் என்றார்.
இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது 'ஏய்' என்று யாரோ சொல்ல, மேஜர் சாமியோ, சபாநாயகர் அவர்களே, என்னைப் பார்த்து 'ஏய்' என்கிறார்கள். இது சரியல்ல என்றார்.
இதைத் தொடர்ந்து தேமுதிகவின் பாஸ்கர் பேசுகையில், தர்மபுரி நகருக்கு வாரம் ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் கிடைக்கும் என்று கூறினீர்கள். எப்போது தண்ணீர் கிடைக்கும் என்று கேள்வி கேட்டார். ஒகேனக்கல் குடிநீர் தர்மபுரி நகருக்கு வந்துவிட்டது. விரைவில் முதல்வர் திருக்கரங்களால் காவிரி தண்ணீர் வந்து சேரும் என்று அமைச்சர் முனுசாமி பதிலளித்தார்.
சட்டசபையில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications