காவிரி: 'ஷட்டரை' திறந்த ஷெட்டருக்கு நெருக்கடி! ஆட்சியை துறக்க- ஜெயிலுக்கும் போக ரெடி!!

கர்நாடகா சட்டசபையில் காவிரி நீரை திறந்துவிட்ட விவகாரத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு பதிலளித்த ஜெகதீஷ் ஷெட்டர், காவிரி பிரச்சினை தொடர்பாக பலமுறை அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி கருத்துகளையும், ஆலோசனையும் பெற்று செயல்பட்டு வந்துள்ளேன். நாம் இருப்பது கூட்டாட்சி முறையில்! இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாநிலங்கள் கட்டுப்பட்டவை. அதன்படி நாம் ஆட்சி செய்கிறோம்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கபிறப்பித்துள்ள உத்தரவு குறித்து நமது வழக்கறிஞர் நாரிமனுடன் கலந்து ஆலோசனை செய்து அவரது அறிவுரைப்படியே திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விட்டதற்கு பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். நான் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டு ஜெயிலுக்கு செல்லவும் தயார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications