தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நில அபகரிப்பு புகார் மனு தள்ளுபடி!
கரூர்: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சேர்க்க கோரும் மனுவை கரூர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் - தெய்வானை தம்பதி. இவர்களின் தத்துப்பிள்ளை கோகுல் (23). இவர், படித்து முடித்து, கோவையில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்தார்.
ராமலிங்கம் மறைவிற்கு பிறகு, வளர்ப்பு மகன் கோகுலுடன் தெய்வானை கரூர் குளத்துப்பாளையத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ராமலிங்கத்திற்கு கரூரில் சேலம் பைபாஸ் ரோட்டில் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது.
கடந்த 2011 ம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் இருந்து கரூருக்கு வந்த கோகுலை, கரூரைச் சேர்ந்த சிலர் காரில் கடத்தி, கோகுலை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோகுல், கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ம் தேதி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நடராஜன், கருப்பண்ணன், பிரபு, பெரியசாமி, மோகன்ராஜ் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
மேலும், இந்த கடத்தல், நில அபகரிப்பு குறித்து, கடந்தாண்டு ஜனவரி 5 ம் தேதி கரூர் 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் கோகுல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் 5 ம் தேதி வக்கீல் மணிராஜ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாஜிஸ்தி ரேட் ராமநாதன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதி மன்றத்தில், வழக்கு விசாரணை வக்கீல்கள் விவாதமும் நடைபெற்ற போது, இன்னாரை வழக்கில் சேர்க்க வேண்டும் என மூன்றாவது நபர் கோர முடியாது. அதற்கான முகாந்திரம் இல்லை. காவல் துறையினர் தான் இவ்வாறு கோர முடியும் என அரசு வக்கில் வாதாடினார்.
இதனையடுத்து, இந்த மனுவை மாஜிஸ்திரேட் ராமநாதன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அமைச்சர் செந்தில்பாஜியை இந்த வக்கில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதால், அமைச்சர் செந்தில் பாலாஜி நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications