ஹைதராபாத்: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை: ஒரே நாளில் 18 குழந்தைகள் பலியான பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவு இல்லாததால் ஐதராபாத் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 18 குழந்தைகள் பலியானதாக வெளியான தகவலால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐதராபாத்தில் அமைந்துள்ளது நிலோபர் அரசு குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததாலும், மருத்துவர்கள் பற்றாக்குறையாலும் 24 மணி நேரத்தில் மட்டும் 18 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இறந்த குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் விளைவாக மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் உண்டானது. போலீசார் தகவல் அறிந்து விரைந்து வந்ததால், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications