தமிழ் மொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழ் தாய்க்கு ரூ.100 கோடியில் சிலை தேவையா?: இல. கணேசன்

இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு 2 ஆண்டுகளில் செய்த சாதனைகளில் பெரும்பாலானவை இலவசங்கள் தான். இதை எல்லாம் சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழக அரசின் திட்டங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. மலிவு விலை உணவகங்களால் மக்கள் மேலும் சோம்பேறியாகத் தான் போவார்கள்.
தமிழ் போதனை மொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழ்த் தாய்க்கு ரூ.100 கோடி செலவில் சிலை வைப்பது தேவையில்லாதது. தமிழக அரசு தமிழுக்கு அல்லாமல் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது வேதனையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதில் அர்த்தமில்லை.
தமிழக அரசு விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணமாக நஷ்ட ஈடு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் மத்திய அரசு வறட்சி நிவாரணப் பகுதிகளை பார்வியிட்டதே தவிர இதுவரை நிவாரணம் அறிவிக்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications