சென்னை அரசு அச்சகத்தில் தீ... ஆவணங்கள் நாசம்: பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்
சென்னை: சென்னையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தி்ல் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
சென்னை தங்கசாலையில் அரசு மைய அச்சகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசுக்கு தேவையான அறிக்கைகள், காலண்டர், டைரி போன்றவையும் இங்கு அச்சடிக்கப்படுகின்றன.
இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள ஒரு அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக, அச்சக ஊழியர் கோதண்டராமன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அச்சக அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நிருபர்களும், புகைப்படகாரர்களும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் உள்ளே புகுந்து படம் எடுக்க முயன்றனர். அவர்களை தாக்கிய ஊழியர்கள் சிலர், கேமரா, செல்போனை பறித்தனர்.
பத்திரிக்கையாளர்கள் போராட்டம்
இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அச்சக இயக்குனர் ஆபிரகாமிடம் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது பற்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு ஏழு கிணறு போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடையே சமரசம் பேசினர். இதையடுத்து பரபரப்பு அடங்கியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications