ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்: ஸ்ரீசாந்த், அங்கீத் சவானுக்கு ஜாமின்

ஐ.பி.எல் போட்டியின் போது ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லி, மும்பை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நாடுமுழுவதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பல தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலிவுட் நடிகர் விண்டூ தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ ஆலோசகர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இதன் மீதான விசாரணை நேற்று டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வினய் குமார் கன்னா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்களை காவல் துறை சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்தார்.
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு இல்லையெனில், மகாராஷ்ட்ராவில் புதிதாக கொண்டுவரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் குற்றவாளிகள் என நம்புவதற்கில்லை என போலீசாரை நீதிபதி கண்டித்தார்.
ஆனால், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், ஆவணங்களை வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான வீரர்கள் அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் 16 தரகர்களுக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜாமின் கிடைத்த அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கிடைத்திருப்பதற்கு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications