இளவரசன் மர்ம மரணம்- விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு- ஞானதேசிகன்

இது குறித்து , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில்,
தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இளவரசனின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் காதலிப்பது என்பது தமிழகத்தில் நடைபெறுகிற ஒரு சாதாரண நிகழ்வு தான். இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் ஒரு சமூகத்தைச் சார்ந்த சில பேர் இதற்கு சமூக சாயத்தை பூசியதன் விளைவாக அது சமுதாய மோதலாக மாறி, அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பல வீடுகள் தாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு சமூகத்தைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் 144 தடை உத்தரவு சில நாட்கள் முன்பு வரை அம்மாவட்டத்தில் இருந்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில் இளவரசன் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
அதேநேரத்தில் இந்த நிகழ்வு சமூக விரோதமாக மாறிவிடக் கூடாது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
உண்மையை கண்டறியும் முயற்சியில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. அதே நேரத்தில் இளவரசன் காதலியான திவ்யாவிற்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிமனித உறவுகள், சமூக பிரச்சினைகளாக மாற்றுவது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல. அதைவிட இந்த உறவுகள், அது சம்மந்தமான பிரச்சினைகளை அரசியலாக்குவது இன்னும் மோசமான விளைவுகளைத் தான் உருவாக்கும் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications