என்.எல்.சி. பங்குகளை வாங்க முன்வந்துள்ள அதிமுக அரசுக்கு ஞானதேசிகன் பாராட்டு
சென்னை: என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் எம்.பி. பல்வேறு கட்டங்களாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை முகுல் வாஸ்னிக் தொடங்கி வைத்தார். முதல் படிவத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பெற்றுக் கொண்டார்.
அப்போது ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் ஜூலை 19ம் தேதி காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு கருத்து கேட்பார். பின்பு, மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
என்.எல்.சி. விவகாரத்தில் செயல் விதிப்படி 100 சதவீத பங்குகளை ஒரே நிறுவனம் வைத்திருக்க முடியாது. எனவே தான் 5 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு வாங்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications