டெல்லியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 200 மாணவர்களுக்கு தலைசுற்றல், மயக்கம்
டெல்லி: டெல்லியில் இரும்புசத்து மாத்திரை சாப்பிட்ட 200 மாணவர்கள் தலைசுற்றல், வாந்தி, மயக்கத்திற்கு ஆளான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மாணவ - மாணவிகள் ஊட்டச்சத்து பெறுவதற்காக சுகாதாரத்துறை சார்பில் இரும்பு சத்து மாத்திரை கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அசோக் விகார் ‘எச்' பிளாக்கில் உள்ள சர்வோதயா கன்னியா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை கொடுக்கப்பட்டது. மாத்திரை சாப்பிட்ட சுமார் 30 நிமிடங்களில் 200 மாணவ-மாணவிகளுக்கு தலை சுற்றல், மயக்கம், வாந்தி ஏற்பட்டது.சில மாணவர்கள் கடும் வயிற்று வலியால் துடித்தனர்.
இதையடுத்து சுந்தர்லால் ஜெயின் ஆஸ்பத்திரியில் 8 மாணவர்கள் குருதெக் பகதூர் ஆஸ்பத்திரியில் 7 பேர், பிரவேஸ்சந்தர், இந்து ராவ், ஆரோக்ய சன்ஸ்தன், அம்பேத்கர் ஆஸ்பத்திரிகளில் 6 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினார்கள்.
டெல்லி வடமேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கருணாகரன் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். இந்திய தண்டனை சட்டம் 337-வது பிரிவின்கீழ் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் டெல்லி மாநில அரசு அதிகாரிகள் இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடும் மாணவர்களில் ஒரு சதவீதம் பேருக்கு இப்படி பக்க விளைவுகள் ஏற்படுவது சகஜம்தான் என்று டெல்லி மாநில சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்கள் பலியான சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போன்ற சம்பவம் மராட்டியம், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் நடந்தது.தமிழ்நாட்டில் நெய்வேலியில் சத்துணவு சாப்பிட்ட 106 மாணவிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications