யார் இந்த யாசின் பட்கல்?: அவன் மீதுள்ள வழக்குகள் எத்தனை?
டெல்லி: தேசிய புலனாய்வு நிறுவனத்தாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் மீதுள்ள வழக்குகளைப் பற்றி பார்ப்போம்.
பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் இன்று நேபாளில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் யார் இந்த யாசின் பட்கல் என்று பார்ப்போம்.

கர்நாடகத்துக்காரர்
கர்நாடக மாநிலம் பட்கல் பகுதியில் 1983ம் ஆண்டு பிறந்தவர் யாசின் பட்கல். அங்குள்ள அஞ்சுமன் ஹமி இ முஸ்லிமீன் மதரஸாவில் படித்த பிறகு பட்கல் 1990ம் ஆண்டு புனேவுக்கு சென்றார். அதன் பிறகு அவர் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை துவங்கினார்.

குற்றப்பத்திரிக்கை
கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் 10 சம்பவங்களிலாவது பட்கலுக்கு தொடர்பு உள்ளது என்று 12 மாநிலங்களின் தீவிரவாத தடுப்பு ஏஜென்சீக்கள் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன.

குண்டுவெடிப்புகள்
ஹைராபாத்(2007)(இரட்டை குண்டுவெடிப்பு), அகமதாபாத் (2008), சூரத்(2008), ஜெய்பூர் (2008), டெல்லி (2008), வாரனாசி (2010), பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் (2010), புனே ஜெர்மன் பேக்கரி (2011), மும்பை (2011), ஹைதராபாத் (இரட்டை குண்டுவெடிப்பு) (2013), பெங்களூர் (2013) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் யாசின் பட்கலுக்கு தொடர்பு உள்ளது.

மாறுவேட மன்னன்
பட்கலுக்கு தொழில்நுட்பம் பிடிக்காதாம். ஆனால் போலீசாரை ஏமாற்ற மாறுவேடமிட்டு திரிவதில் வல்லவனாம்.

2009ல் கைதாகி விடுதலை
யாசின் பட்கல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு திருட்டு வழக்கில் கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தான் புல்லா மாலிக் என்றும், தான் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் கூறி நைசாக வெளியே வந்துவிட்டார். புல்லா மாலிக் தான் யாசின் என்று போலீசாரால் நிரூபிக்க முடியாமல் போனது.

இந்திய-நேபாள எல்லையில் காத்திருப்பு
யாசின் பட்கலின் இருப்பிடம் குறித்து தகவல் அறிந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இந்திய-நேபாள எல்லையில் ஒரு வாரமாக காத்திருந்தனர்.

இறுதியில் கைது
போலீசாரின் காத்திருப்பு வீண் போகவில்லை. இந்திய-நேபாள எல்லையில் பட்கலை தேசிய புலனாய்வு நிறுவனத்தார் இன்று கைது செய்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications