யார் இந்த யாசின் பட்கல்?: அவன் மீதுள்ள வழக்குகள் எத்தனை?
டெல்லி: தேசிய புலனாய்வு நிறுவனத்தாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் மீதுள்ள வழக்குகளைப் பற்றி பார்ப்போம்.
பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் இன்று நேபாளில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் யார் இந்த யாசின் பட்கல் என்று பார்ப்போம்.

கர்நாடகத்துக்காரர்
கர்நாடக மாநிலம் பட்கல் பகுதியில் 1983ம் ஆண்டு பிறந்தவர் யாசின் பட்கல். அங்குள்ள அஞ்சுமன் ஹமி இ முஸ்லிமீன் மதரஸாவில் படித்த பிறகு பட்கல் 1990ம் ஆண்டு புனேவுக்கு சென்றார். அதன் பிறகு அவர் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை துவங்கினார்.

குற்றப்பத்திரிக்கை
கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் 10 சம்பவங்களிலாவது பட்கலுக்கு தொடர்பு உள்ளது என்று 12 மாநிலங்களின் தீவிரவாத தடுப்பு ஏஜென்சீக்கள் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன.

குண்டுவெடிப்புகள்
ஹைராபாத்(2007)(இரட்டை குண்டுவெடிப்பு), அகமதாபாத் (2008), சூரத்(2008), ஜெய்பூர் (2008), டெல்லி (2008), வாரனாசி (2010), பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் (2010), புனே ஜெர்மன் பேக்கரி (2011), மும்பை (2011), ஹைதராபாத் (இரட்டை குண்டுவெடிப்பு) (2013), பெங்களூர் (2013) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் யாசின் பட்கலுக்கு தொடர்பு உள்ளது.

மாறுவேட மன்னன்
பட்கலுக்கு தொழில்நுட்பம் பிடிக்காதாம். ஆனால் போலீசாரை ஏமாற்ற மாறுவேடமிட்டு திரிவதில் வல்லவனாம்.

2009ல் கைதாகி விடுதலை
யாசின் பட்கல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு திருட்டு வழக்கில் கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தான் புல்லா மாலிக் என்றும், தான் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் கூறி நைசாக வெளியே வந்துவிட்டார். புல்லா மாலிக் தான் யாசின் என்று போலீசாரால் நிரூபிக்க முடியாமல் போனது.

இந்திய-நேபாள எல்லையில் காத்திருப்பு
யாசின் பட்கலின் இருப்பிடம் குறித்து தகவல் அறிந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இந்திய-நேபாள எல்லையில் ஒரு வாரமாக காத்திருந்தனர்.

இறுதியில் கைது
போலீசாரின் காத்திருப்பு வீண் போகவில்லை. இந்திய-நேபாள எல்லையில் பட்கலை தேசிய புலனாய்வு நிறுவனத்தார் இன்று கைது செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications