எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன்னு சொல்வாங்களா?- ராஜ்யசபாவில் மன்மோகன் சிங்
டெல்லி: எந்த ஒரு நாட்டிலாவது நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சபையின் நடுவில் ஒன்று கூடி பிரதமரை ஒரு திருடன் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறீர்களா என்று ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடியாக எந்த ஒரு நாட்டிலாவது ஒரு பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல வாக்குகளை விலைக்கு வாங்கியதுண்டா? என்று பாஜகவின் அருண்ஜேட்லி பதிலடி கொடுத்தார்.
ராஜ்யசபாவில் ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்தார்.

பிரதமரை திருடன் என்று சொன்னதை கேள்விப்பட்டீர்களா
அப்போது பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எந்த ஒரு நாட்டிலாவது இப்படி எம்.பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு நடுவே வந்து பிரதமருக்கு எதிராக பிரதமர் ஒரு திருடன் என்று முழக்கமிடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாட்டின் மீது நம்பிக்கையை அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.

நிலக்கரி கோப்பு மாயமனாதில் தொடர்பு இல்லை
இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் இருக்கிறது என்பதை அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும். நிலக்கரி ஒதுக்கீடு கோப்புகள் மாயமானதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. என் பொறுப்பிலும் அந்த கோப்புகள் இருக்கவும் இல்லை என்று கூறினார்.

அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதில் இடையூறு!
மேலும் எந்த ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையிலாவது அமைச்சர்களை பிரதமர் அறிமுகப்படுத்தும் போது எதிர்க்கட்சிகள் அதை அனுமதிக்காததை கேள்விபட்டது உண்டா? என்று பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பினார்.

வாக்குகளை விலைக்கு வாங்கிய பிரதமர்
உடனே எழுந்த பாஜக தலைவர் அருண் ஜேட்லி, எந்த ஒரு ஜனநாயகத்திலாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக ஒரு பிரதமரே வாக்குகளை விலைக்கு வாங்கியதைக் கேள்விபட்டது உண்டா? என்று பதில் கேள்வி எழுப்ப அவை பரபரப்பானது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications