கச்சத்தீவு.. வாஜ்பாய்: கருணாநிதி பாயிண்ட்டை வைத்து ராஜ்யசபாவில் அதிமுக மைத்ரேயன் பேச்சு

கச்சத்தீவு பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் இன்று மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 26ல் கச்சத்தீவு இலங்கையிடம் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் மைத்ரேயன் கூறினார்.
இந்திரா காந்தி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்று கூறிய மைத்ரேயன், கச்சத்தீவை இலங்கையிடம் அளித்தது தொடர்பாக அரசியல் சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை என்றார்.
எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம் என மது லிமாயி போன்ற தலைவர்களும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என கூறியுள்ளனர்.
கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.
இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று மைத்ரேயன் குற்றம்சாட்டினார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று விடுத்த அறிக்கையில் கச்சத்தீவு பற்றி வாஜ்பாய் கூறிய கருத்தை சுட்டிக்காட்டியிருந்தார். அதையே இன்று தனது பாயிண்டாக ராஜ்யசபாவில் பதிவு செய்துள்ளார் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications