புதுவை சட்டம் ஒழுங்கு மோசம்! ஆளுநர் பகிரங்க பேட்டி! 'ரங்கசாமி' ஆட்சி 'கோவிந்தா'வா?
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பகிரங்கமா பேட்டி கொடுத்திருப்பதால் முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ரங்கசாமியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புதுவையில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் கடந்த மாதம் வியாபாரிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர் .ஆனால் மாநில அரசு ரவுடிகளை ஒடுக்கவில்லை.

சட்டம் ஒழுங்கு மோசம்- ஆளுநர் அதிரடி பேட்டி
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புதுவையில் சட்டம்- ஒழுங்கு நிலைமை சரியில்லை. ரவுடிகளை கட்டுப்படுத்தும்படி முதல்வர் ரங்கசாமியிடம் கூறினேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்தவில்லை.

உள்துறை அமைச்சரை சந்திப்பேன்
எனவே புதுவையில் சட்ட ஒழுங்கு பிரச்சிரனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறேன். ரவுடிகளை ஒடுக்க நானே நேரடியாக நடவடிக்கையில் இறங்க போகிறேன் என்று அதிரடியாக பேட்டி கொடுத்திருந்தார்.

ஆட்சி டிஸ்மிஸ் அபாயம்
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஒரு மாநில ஆளுநரே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினால் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் நிலைதான் உருவாகும்.
தற்போது புதுவை மாநில ஆளுநர் பகிரங்கமாக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று முதல்வர் ரங்கசாமி மீது புகார் கூறியிருப்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறும்போது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநரே கூறி விட்டார். எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.

அதிமுக
புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறுகையில், புதுவையில் உண்மை நிலவரங்களை ஆளுநர் கூறியிருக்கிறார். ஆளுநர் இது தொடர்பாக எழுத்து மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக
மாநில தி.மு.க. அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் கூறும் போது, புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆளுநர் தான் தலைமை நிர்வாகி ஆவார். அவரே சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருக்கிறார். இதை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. இங்குள்ள உண்மை நிலவரங்களை அவர் வெளியே சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் ஆளுநருக்கு முதல்வருகும் இடையே சரியான உறவு இல்லை என்பதை காட்டுகிறது என்றார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications