30 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்களை இடிச்சிருக்காங்க.. அத்தனையையும் மீட்கப்போறோம்: ஸ்ரீராமசேனா
பெங்களூர்: ஞானவாபி வழக்குக்கு மத்தியில் இந்தியாவில் 30000 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சட்டபோராட்டம் மூலம் கோவில்கள் மீட்கப்படும் எனவும் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஸ்ரீராம சேனா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக பிரமோத் முத்தலிக் உள்ளார். இந்நிலையில் பிரமோத் முத்தாலிக் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் 30,000 இந்து கோவில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மீட்போம். தைரியம் இருந்தால் தடுத்து பாருங்கள். பாபர்மசூதி பிரச்சனையின்போது ரத்த ஆறு ஓடும் என கூறினார்கள். ஆனால் இந்துக்களை தொட முடியவில்லை. மனசாட்சி இருந்தால் இதற்கு முன்பு இடிக்கப்பட்ட கோவில்களின் இடத்தை எங்களிடம் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள். இனியும் நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். சட்டப்போரட்டம் மூலம் மீட்போம். எங்களை தடுக்க முடியாது.
முன்னதாக பாஜகவின் முன்னாள் துணை முதல் அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பாவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில், ‛‛ இந்தியாவில் மொத்தம் 36 ஆயிரம் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் மசூதி கட்டி தொழுகை நடத்தலாம். ஆனால் இந்து கோவில்கள் நிலத்தில் கட்டிய மசூதிகள் மீட்கப்படும்'' என தெரிவித்து இருந்தார்.
சமீப காலமாக இந்தியாவில் மசூதிகள், புராதான சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே மங்களூர் மசூதி கீழே இந்து கோவில் போன்ற அமைப்பு தென்பட்டது. ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தகவல் வெளியானது. குதுப்மினார் கூட இந்து கோவில் மீதுதான் கட்டப்பட்டதாக சர்ச்சை வந்தது. இவற்றின் தொடர்ச்சியாக தான் இந்து கோவில்களை மீட்போம் என சவால் விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications