அம்மா, அக்கா கழுத்தை அறுத்து கொன்ற பெங்களூர் இளைஞர்.. கடன் பிரச்சனையால் தானும் தற்கொலைக்கு முயற்சி!
பெங்களூர்: கர்நாடகாவில் கடன் பிரச்சினையால் ஒரு குடும்பமே எடுக்கக்கூடாத முடிவை எடுத்துள்ளது. மோகன் என்ற நபர் அவரது தாய் மற்றும் சகோதரியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த செய்தி ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர வைப்பதாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடன் பிரச்சினைகளால் சில குடும்பங்கள் எடுக்கக்கூடாத முடிவை எடுத்துவிடுகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் அப்படி தான் தேவையில்லாத கடனால் ஒட்டுமொத்த குடும்பமே சிதைந்து போயுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று பெரும் கடன் சுமையால் தற்கொலைக்கு முயன்றது.

உயிரிழப்பு
இதில் இருவர் உயிரிழந்த சூழலில், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.. இதில் உயிரிழந்தவர்கள் ஆஷா (55) மற்றும் அவரது மகள் வர்ஷிதா (34) எனத் தெரிய வந்துள்ளது. வர்ஷிதாவின் சகோதரர் மோகன் கௌடா (32) மற்றும் வர்ஷிதாவின் 11 வயது மகன் மயங்க் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோகன் தான் இந்த கொடூரத்தைச் செய்துள்ளார். அவர் தனது தாய், சகோதரி, சகோதரி மகனின் கழுத்தை அறுத்துள்ளார். பிறகு தானும் தற்கொலைக்கு முயன்றார். தங்கள் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் கடன் அதிகமானதாலேயே வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுப்பதாகச் சொல்லி வீடியோ பதிவு செய்து, அதை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பிறகே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வீடியோ
மோகன் குடும்பத்தினர் இது போல தங்களுக்கு வீடியோவை அனுப்பியதால் பதறிய உறவினர்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வீடியோவை பார்த்த உறவினர்கள் சிலர் உடனே மோகன் வீட்டிற்கு விரைந்தனர். இருப்பினும் கதவுகள் பூட்டியிருந்தது. இதையடுத்து பின்புற வாசல் வழியாக உறவினர்கள் நுழைந்துள்ளனர்.
உறைந்துபோன உறவினர்கள்
உள்ளே அவர்கள் கண்ட காட்சி ஒரு நொடி உறைய வைத்துவிட்டது. நான்கு பேரும் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். அதற்குள் தகவல் கிடைத்த போலீசாரும், சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் அங்கு வந்தபோதே ஆஷா மற்றும் வர்ஷிதா உயிரிழந்திருந்தனர். இதையடுத்து அவர்களை உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த மோகன் மற்றும் மயங்க் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பினர்..
கடன்
அந்த குடும்பத்தினரின் அதிகப்படியான கடன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகப் பெங்களூர் ரூரல் போலீசார் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் தெரிவித்தார். மோகன் அங்கு உகாதி மற்றும் தீபாவளி சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். ₹5 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான சீட்டுகளை மோகன் நடத்தி வந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை முறையில் மோகம் கொண்டிருந்த மோகன் குடும்பத்தினர் இல்லாத பணத்தைக் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மளமளவெனக் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கூறுகிறார்கள்.
கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாமல் குடும்பத்தினர் இம்முடிவை எடுத்ததாக உறவினர்களும் கூறுகிறார்கள். போலீசார் முதற்கட்ட விசாரணையும் கூட கடன் தான் இதற்குக் காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications