அதிரடி.. பெங்களூர் கடை, ஓட்டல், மால்களில் இனி இது கட்டாயம்! மீறினால் அவ்வளவுதான்.. பிபிஎம்பி உத்தரவு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள கடைகள், ஓட்டல்களில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என பெங்களூர் மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர்.. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. பெங்களூரில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூரில் வசித்து கொண்டு பணி செய்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது ஒரு கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.
பெங்களூரை பொறுத்தமட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கன்னடம் பேச தெரிந்திருந்தாலும் கூட வாசிக்க தெரியாது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள சாலையோர கடைகள் முதல் பெரிய பெரிய வணிக வளாகங்களில் ஆங்கிலத்தில் தான் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த போர்டில் கன்னட மொழியும் இடம் பெற்றிருக்கும். சில இடங்களில் பெயர் பலகைகளில் கன்னட மொழி இல்லாமல் கூட உள்ளது.
இதற்கிடையே தான் பெங்களூர் நகரில் உள்ள கடை, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் கன்னட பெயர் பலகைகள் இல்லாததை எதிர்த்து கன்னட அமைப்பினர் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். சிக்பேட்டையில் உள்ள கடைகளை அவர்கள் மூட வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சிக்பேட்டையில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம்பெற செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து தான் பெங்களூர் மாநகராட்சி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னடத்தில் எழுதப்பட்டு இருக்க வேண்டும். 2024 பிப்ரவரி மாதம் 28 ம் தேதிக்குள் பெயர் பலகைகளில் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications