"வார் ரூம்".. கர்நாடகா சட்டசபைத் தேர்தல்.. வேலையை தொடங்கிய காங்கிரஸ்.. களமிறங்கிய டீம்!
பெங்களூரு: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சி தரப்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. முதலமைச்சர் பதவியை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. இருந்தும், அடுத்த ஆண்டே 2019ல் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாஜக பதவி விலக செய்ததையடுத்து, ஜேடியு - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.

இதனைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த ஆண்டு எடியூரப்பா பதவி விலகினார். பின்னர் கர்நாடகா முதலமைச்சராக பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வரும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே பாஜக - காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காகவே அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மறுபக்கம் காங்கிரஸ் கட்சி தரப்பில் கர்நாடகாவின் மூத்த தலைவர்களான சித்தராமய்யா மற்றும் டிகே சிவக்குமார் உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் தரப்பில் தேர்தல் பணிகளை தொடங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியின் பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறைக் குழுவின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஷிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2019ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே காங்கிரஸ் கட்சி தயாராகி வருவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஏற்படும் சிறுபான்மை மக்கள் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை ஆகியவற்றை முக்கிய பேசுபொருளாக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications